இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். கடைசியாக 2017 பிப்ரவரி வாக்கில் இந்திய அணிக்காக களமிறங்கிய அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என்று தெரிவித்தார். டி20 போட்டிகளில் மூத்த வீரர்களை விட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம் என்று விராட் கோலி தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அமித் மிஸ்ரா, “அடுத்த உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. அப்போது அவரின் வயது 34 ஆக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது விராட் கோலியின் யோசனையாக இருந்தது.”
“வரும் காலங்களில் அசாத்தியாக விளையாடும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. தற்போது அணியில் இருப்பதை காட்டிலும், அடுத்த உலகக் கோப்பை தொடர் வரை அவர் அதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வாய்ப்புகள் கடினமாகும் சூழல் உருவாகிடும். இஷான் கிஷன், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் என பல இளம் வீரர்கள் உள்ளனர்.”
“இளம் வீரர்களின் குறிக்கோள் டி20 போட்டிகளில் விளையாடுவதாகவே இருக்கிறது. எனினும், டி20 கிரிக்கெட்டில் போட்டியை வெற்றி பெற செய்வது பெரும்பாலும் மூத்த வீரர்கள் தான். டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற அனுபவம் மிகவும் அவசியம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…