வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசி பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் வெளிநாட்டுகளில் கிரிக்கெட் விளையாடும் போது சதம் அடிக்காததால் அவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிகவும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி சதம் விளாசினார்.
மேலும், நேற்று சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது -29 வது சதத்தை நேற்று விராட் கோலி பதிவு செய்தார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் 500-வது போட்டியில் சதம் விளாசிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அதைப்போல, இதற்கு முன்பு 29 சதங்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை வைத்திருந்த பிராட் மேனின் அந்த சாதனையும் விராட் கோலி சமன் செய்தார்.
இந்த நிலையில் சதம் விலகிய விராட் கோலிக்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக விடுதலை பக்கங்களில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
விராட் கோலியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள சச்சின் மற்ற நாள் போல் இன்று உங்களுடைய நாள் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் விராட் கோலி நீங்கள் அருமையாக விளையாடினீர்கள்” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…