இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 2020-21 ஆண்டு இந்திய அணி மேற்கொண்ட ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மிக மோசமாக இருந்ததாக ஷர்துல் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு தேவையான வசதிகள் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி மிக மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்கள் எங்களை மிக மோசமாக நடத்தினார்கள். நான்கு, ஐந்து நாட்களுக்கு தங்கும் விடுதியில் ஹவுஸ்கீப்பிங் சேவை வழங்கப்படாது. போர்வைகளை மாற்ற வேண்டுமெனில், கடுமையான உடல் அசதியிலும் ஐந்து மாடிகள் வரை நடக்க வேண்டி இருக்கும். டிம் பெய்ன் (அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன்) நேர்காணல்களில் சிலவற்றை கேட்டேன். அவர் பொய் சொல்கிறார். ஊடகத்திற்காக அவர் அப்படி பேசுகிறார். ஆனால் உண்மை எனக்குத் தான் தெரியும்.
விராட் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அஜிங்கியா ரஹானே (அந்த தொடரில் இந்திய கேப்டன்) மற்றும் ரவி சாஸ்திரி (அந்த தொடரில் இந்திய பயிற்சியாளர்) ஆகியோர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் எங்களுக்கு தேவையானதை வழங்க அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
முதல் முறையாக, நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, ஆஸ்திரேலியர்களை பார்க்கக்கூட விரும்பவில்லை. போய் உங்களது டிரெசிங் ரூமில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்ல நினைத்தோம், என்று தெரிவித்தார்.
விராட் கோலி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது, முக்கிய வீரர்களுக்கு காயம் என பல இக்கட்டான சூழ்நிலையிலும், இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 எனும் கடின இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…