Categories: Cricket

ஷிகர் தவான் ஓய்வு.. கோலி, ரோகித் சொன்னது என்ன?

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான். அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் விளையாடாத ஷிகர் தவானின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து செய்திகளையும், சிறப்பு குறிப்புகளையும் எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என்ன கூறியுள்ளனர் என்று தொடர்ந்து பார்ப்போம்.

ஷிகர் @SDhawan25 உங்களின் அச்சமற்ற அறிமுகத்திலிருந்து இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக மாறியது வரை, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்கள் வர்த்தக முத்திரை புன்னகை தவறவிடும், ஆனால் உங்கள் மரபு வாழ்கிறது

“ஷிகர் உனது பயமறியா அறிமுகத்தில் இருந்து இந்தியாவின் நம்பிக்கைக்குரிய துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக மாறியது வரை, நீ எங்களுக்கு ஏராளமான நினைவுகளை எங்களுக்குக் கொடுத்திருக்கிறாய். விளையாட்டின் மீது உன் ஆர்வம், உனது விளையாட்டுத் திறன் மற்றும் உனக்கே உரித்தான புன்னகை, என அனைத்தையும் நாங்கள் இழக்கிறோம், ஆனால் உனது லெகசி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.”

“நினைவுகள், மறக்க முடியாத ஆட்டங்கள் மற்றும் உன் மனமுவந்து வழிநடத்தியதற்கு நன்றி. களத்திற்கு வெளியே உனது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கபர்” என்று விராட் கோலி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“அறைகளை பகிர்ந்து கொண்டதில் துவங்கி, வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத தருணங்களை களத்தில் பகிர்ந்து கொண்டது வரை. மறுமுனையில் இருந்து கொண்டு என் பணியை நீ எப்போதும் எளிமையாக்கி இருக்கிறாய். நீ தான் அல்டிமேட் ஜாட்,” என்று கேப்டன் ரோகித் சர்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago