இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக உருவாகி வருபவர் சுப்மன் கில். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்கு தேர்வான சுப்மன் கில் இந்திய அணியின் பேட்டிங்கில் அசாத்தியமாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங் மட்டுமின்றி சுப்மன் கில் அணியை வழிநடத்துவதிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தும் சுப்மன் கில், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் வகையில் வழிநடத்தினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு விரைவில் துவங்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில் ஒருநாள், மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று நம்புவதாக முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
“குஜராத் டைட்டன்ஸ் அல்லது ஜிம்பாப்வே என எவ்வகையில் பார்க்கும் போதும் சுப்மன் கில் சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளார். அவரது உடல்மொழி அபாரமாக இருக்கிறது. ஒரு அணியை வழிநடத்துவதற்கு அது மிகமுக்கியமான ஒன்று. துணை கேப்டனாக அறிவித்ததன் மூலம், பிசிசிஐ தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளது. இதிலும் அவர் சிறப்பாக செயல்படுவார்.”
“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலைசிறந்து விளங்குவதற்கு கேப்டன் பொறுப்பு மிகப்பெரிய பங்காற்றியதாக நான் நினைக்கிறேன். இதே விஷயம் சுப்மன் கில்லுக்கும் நடக்கும் என்று உணர்கிறேன். அவர் இன்னும் கேப்டன் ஆகவில்லை என்ற போதிலும், தலைமை பண்பு அவரிடம் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
“மற்றவர்களை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும்போது, உங்களுக்கான பொறுப்புணர்வு அதிகரிக்கும், இது நல்ல விஷயம். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு இது சிறப்பான ஒனஅறு. இது ஒருநாள் அவரை இந்திய கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளுக்கான அணியை அவர் வழிநடத்துவார்,” என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…