Categories: Cricket

இலங்கை U19 அணி முன்னாள் கேப்டன் சுட்டுக் கொலை

இலங்கை U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையின் அம்பலங்கோடாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தமிகா வசித்து வந்துள்ளார். இலங்கை முன்னாள் வீரர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிகாவை சுட்டுக் கொன்றவர்கள் 12-போர் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர் என்று முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. கொலை பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தமிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து தலைசிறந்த பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக வலம்வந்தவர் தமிகா நிரோஷனா. இளம் வயது கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய தமிகா நிரோஷனா ஃபர்வேஸ் மஹரூஃப், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா போன்ற வீரர்களை வழிநடத்தியுள்ளார். எனினும், தனது 20 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து தமிகா விலகிவிட்டார்.

2001 முதல் 2004 வரையிலான காலக்கட்டங்களில் 12 முதல்தர போட்டிகள் மற்றும் எட்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் தமிகா நிரோஷனா விளையாடி உள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பட்டையை கிளப்பும் வீரராக செயல்பட்டவர் தமிகா. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில் இவர் 300-க்கும் அதிக ரன்கள் மற்றும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

2000 ஆம் ஆண்டு இவர் இலங்கை U19 அணியில் இடம்பிடித்தார். இதில் இரண்டு ஆண்டுகள் வரை அவர் இலங்கை அணிக்காக பல்வேறு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

2 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

2 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

5 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

6 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

7 hours ago