கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுக்க மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடு மற்றும் கொலை சம்பவம் குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இத்தகைய பிரச்சினைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதை தவிர்த்து, ஆண்களை சரியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டா பதிவில், “உங்கள் மகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற வாக்கியம் அழிக்கப்பட்டு, அதன் கீழ் சிவப்பு நிறத்தில் உங்கள் மகன், சகோதரர்கள், தந்தை, கணவர் மற்றும் நண்பர்களுக்கு கற்றுக் கொடுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தனது நகரில் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
“இந்த சம்பவம் எப்படி அரங்கேறியது, அது எப்படி விவரிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இது பயங்கரமாக விஷயம். இது குறித்து சிபிஐ, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மிகவும் அவமானகரமாக இருக்கிறது.”
“இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரிகள், குற்றவாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை, இனி இப்படியொரு சம்பவத்தை வாழ்நாள் செய்ய யாருக்கும் தைரியம் வரக்கூடாது. அந்த அளவுக்கு தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்,” என்று சவுரவ் கங்குலி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…