இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அடுத்த வாரம் துவங்கும் டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து முதல்முறை மனம் திறந்த சூர்யகுமார் யாதவ், இதுபற்றி தான் கனவில்கூட நினைத்தது இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொடர்ந்து அன்பை பொழிந்து, ஆதரவளித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி. கடந்த சில வாரங்களில் நடக்கும் சம்பவங்கள் நான் கனவிலும் நினைக்காதவை. அவற்றுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நாட்டிற்காக விளையாடும் உணர்வை என்னால் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாது.”
“புதிய பதவி அதிக பொறுப்பு, சுவாரஸ்யம் மற்றும் புத்துணர்ச்சியை கொண்டுவருகிறது. உங்களது ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் தொடர்ந்து எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். எல்லா புகழும் கடவுளேக்கே சேரும். கடவுள் சிறந்தவர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். இவரது அறிவிப்பை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டனாக தொடர்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறும் டி20 தொடர் மூன்று போட்டிகளை கொண்டது. இவை ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…