Categories: Cricket

டி20 உலகக் கோப்பை: கேட்ச் பிடித்ததும் சூர்யகுமார் சொன்ன விஷயம் – சீக்ரெட் உடைத்த அக்சர் பட்டேல்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான பேச்சுக்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. குறிப்பிட்ட இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற நிலை இருந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் விளாசிய சிக்சரை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டில் தடுத்து நிறுத்தி, பிடித்த கேட்ச் இந்திய அணி வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கேட்ச் உண்மையில் அவுட் என்று சிலரும், அவுட் இல்லை என்றும் சிலரும் இணையத்தில் வார்த்தை போரிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் இறுதிப் போட்டியில் அந்த கேட்ச் பிடித்த பிறகு, அணியினர் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரங்களை இந்திய அணி வீரர் அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

“டேவிட் மில்லர் அந்த பந்தை அடிக்கும் போது நான் மிட்-விக்கெட்டில் நின்று கொண்டு இருந்தேன், அவர் அடித்ததும் பந்து சிக்சரை கடந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால் சூர்யா அந்த கேட்ச்-ஐ பிடித்ததும், எல்லோரும் அவரிடம், கயிற்றை தொட்டுவிட்டாயா? என்றே கேட்டோம்.”

“முதலில் ஆம் என்று நம்பிக்கையாக கூறியவர், பிறகு எனக்கு மிகச் சரியாக தெரியவில்லை என்று கூறினார். அதன்பிறகு ரீ-பிளே பார்த்த போது, நாங்கள் உலகக் கோப்பையை வென்றுவிட்டோம் என்று 99 சதவீதம் நம்பினோம். அந்த கேட்ச் அதிக மன அழுத்தம் கொண்ட ஒன்று, அவர் அந்த சூழலில் தனது மனதை கட்டுப்படுத்திய விதயம் அற்புதம்,” என்று அக்சர் பட்டேல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

6 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

7 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

9 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

10 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

10 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

11 hours ago