இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புச்சி பாபு தொடரில் விளையாட இருக்கிறார். இதனை மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையின்படி சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டி வருகிற 27 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது. நடப்பு ரஞ்சி கோப்பை வெற்றியாளர்களான மும்பை 2024 புச்சி பாபு தொடரின் க்ரூப் சி பிரிவில் இடம்பஎற்று உள்ளது.
இந்த பிரிவில் மும்பை, தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் இடம்பெற்று உள்ளன. இந்த தொடர் வருகிற 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் மும்பை அணிக்கு சர்பராஸ் கான் கேப்டனாக செயல்படுகிறார். முன்னதாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். இவரது தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. டி20 தொடர் முடிந்தவுடன் குறுகிய கால இடைவெளியில் 50 ஓவர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்தார்.
இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் நேரடியாக புச்சி பாபு தொடரில் தான் விளையாட உள்ளார். இதைத் தொடர்ந்து துலீப் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார். சூர்யகுமார் யாதவ் 82 முதல்தர போட்டிகளில் 5628 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 43.62 ஆகும். இதில் 29 அரைசதங்கள், 14 சதங்கள் அடங்கும்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…