Categories: Cricketworld cup

போட்டி நிறுத்தப்பட்டதும் கனடா அணி டிரெசிங் ரூம் விரைந்த டிராவிட் – ஏன் தெரியுமா?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற வேண்டிய போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத இருந்தன. எனினும், மழை காரணமாக போட்டி துவங்கப்படாமலேயே, ரத்து செய்யப்பட்டு விட்டது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்தது. நேற்றைய போட்டி ரத்தானதும், இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பை தொடர் கனடா அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு முடியவில்லை. அந்த அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நேற்றைய போட்டி கனடாவுக்கு சம்பிரதாய அடிப்படையிலேயே நடைபெற இருந்தது. எனினும், இந்த போட்டிக்கு வானிலையின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

நேற்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கனடா அணியின் டிரெசிங் ரூமிற்கு விசிட் அடித்தார். டிரெசிங் ரூம் வந்த ராகுல் டிராவிட்-க்கு கனடா அணியிர் கையொப்பமிட்ட, அவர்கள் நாட்டின் ஜெர்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் கனடா வீரர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் நன்றி. இந்த தொடரில் இதுவரை நீங்கள் அபரிமிதமான பங்களிப்பை வழங்கியதற்காக பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சிக்கல்களை நாங்கள் அனைவரும் நினைத்து பார்க்கிறோம். இது அத்தனை எளிதான காரியம் இல்லை.”

“2003 ஆம் ஆண்டு நான் ஸ்காட்லாந்தில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறேன். இணை நாடு என்ற வகையில், உங்களது போராட்டம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், உண்மையில் நீங்கள் அனைவரும் எங்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கின்றீர்கள்.”

“இந்த தொடரில் விளையாட நீங்கள் செய்யும் தியாகங்களை பார்க்கும் போது, நீங்கள் இதை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் நாட்டின் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றீர்கள் என்பதை நிச்சயம் என்னால் சொல்ல முடியும். இது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல விஷயம்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago