வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு அணியில் சர்ஃபராஸ் கான், ரிங்கு சிங் அணியில் இடம்பெறாததற்கு காரணம் என்ன என்பதை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய ரோஹித் ஷர்மா ” பொதுவாக ஒரு அணியில் 15 முதல் 18 வீரர்கள் மட்டும்தான் எடுக்க முடியும் அனைவரையும் எடுக்கவே முடியாது எனவே, எடுக்காத வீரர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கான வாய்ப்பு கண்டிப்பாக வரும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்போது இந்திய அணியில் கண்டிப்பாக விளையாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ரோஹித் ஷர்மா ” ஜெய்ஷ்வால் ருத்ராஜ் உள்ளிட்ட வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மிகவும் அருமையாக செயல்பட்டு உள்ளார்கள். அதனால் அவர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் இருவரும் அந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார்கள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” எனவும் கூறியுள்ளார்.
மேலும், நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிறகு இந்திய அணி ஆபரமாக பந்து வீசியதன் காரணமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலே திணற, கிட்டத்தட்ட 150 ரன்காளிலே தனது அணைத்து விக்கெட்களையும் இழந்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணி 80 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் கூட இழக்காமல் அருமையாக விளையாடி வருகிறது. களத்தில் ரோஹித் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…