Cricket
சர்வதேச டி20 பேட்ஸ்மென் – முதலிடத்தை இழந்த சூர்யகுமார் யாதவ்
![Suryakumar Yadav 1 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Suryakumar-Yadav-1.png)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னணி பேட்டர் என்ற பெருமையை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இழந்துள்ளார். தற்போது உலகின் முன்னணி டி20 பேட்டராக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் முன்னேறி அசத்தினார். கடந்த ஆண்டு டிசம்பர் 2023 முதல் உலகின் முன்னணி டி20 பேட்டர் ஆக இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் 255 ரன்களை குவித்தார். இதில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அவர் அடித்த 76 ரன்களும் அடங்கும். இவர் தற்போது 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. முன்னணி டி20 பேட்டர்கள் பட்டியலில் டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ் வரிசையில், பில் சால்ட், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 44 இடங்கள் முன்னேறி முன்னணி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 24 ஆவது இடத்தில் உள்ளார். இவரின் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தில் உள்ளார். ஸ்பின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் 8-ஆவது இடத்தில் உள்ளார். இவர் தற்போது இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கிறார்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
Cricket
கடவுளே இந்தியா கப் ஜெயிக்கனும்.. விசேஷ பூஜை செய்த ரசிகர்கள்
![IND Fans Pooja - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/IND-Fans-Pooja.png)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்களை உச்சக்கட்ட பரபரப்பில் வைத்திருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
இன்றைய இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்காக இன்று காலையிலேயே கோவிலுக்கு புறப்பட்ட ரசிகர்கள் அங்கு இந்திய அணி சிறப்பாக விளையாட கடவுளிடம் வேண்டினர்.
கான்பூரை அடுத்த புனித தளமான வாரணாசியில் இந்திய அணி ரசிகர்கள், இன்றைய இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றிப் பெற்று கோப்பையை வெல்ல சிறப்பு யாகம் நடத்தினர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற முடியும். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி ஐ.சி.சி. கோப்பை எதையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை.
அந்த வகையில் இன்று உலகக் கோப்பையை வெல்லும் அணி, டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பெற முடியும்.
Cricket
டி20 உலகக் கோப்பை: அவருக்காக ஜெயிக்கனுமா? இது ரொம்ப மோசம் – அஷ்வின்
![Ashwin - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Ashwin.png)
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில் இருந்தே, இந்தியா இந்த முறை ராகுல் டிராவிட்-க்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
முன்னாள் வீரர்கள் துவங்கி ரசிகர்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிட்-க்காக இந்த முறை கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஆர்வமுடன் கருத்தை பகிர்ந்து வரும் இந்திய அணி வீரர் ரவிசந்திரன் அஷ்வின் இந்த விவகாரம் குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அணியாக விளையாடக்கூடிய போட்டி ஒன்றை தனிநபருக்காக பில்டு-அப் செய்வது, ஆரோக்கியமான சூழலில் ஏற்படக்கூடிய மிக மோசமான காரியம் ஆகும். இந்த நபரை எனக்கு நன்றாக தெரியும். இதுபற்றி அவரிடம் கூறிய போதே, அதனை தனக்கே ஏற்றவகையில் அதை திசைதிருப்பிவிட்டார். இன்னும் ஒரு முறை போட்டியிடுவோம்,” என்று குறிப்பிட்டு கூடவே #proudofteamIndia எனும் ஹேஷ்டேக்-ஐ இணைத்துள்ளார்.
முன்னதாக உங்களுக்காக இந்த கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆதரவுக்குரல் எழுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்வி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், “ஒரு நபராக எனக்கு எதிரான ஒன்று, மொத்தமாக அது எனது மதிப்புகளுக்கு எதிரானது. மற்றவர்களுக்காக செய்யுங்கள் என்ற விஷயத்தில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இது குறித்த மேற்கோள் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதில் ஒருவர் இன்னொருத்தரிடம் நீங்கள் ஏன் இமயமலை மீது ஏற விரும்புகிறீர்கள் என்று கேட்பார். அதற்கு அவர் இமயமலை மீது ஏன் ஏற விரும்புகிறேன் என்றால், அது அங்கு இருக்கிறது. இதே போல் உலகக் கோப்பை ஏன் வெல்ல வேண்டும் என்று கேட்டால், ஏனெனில் அது அங்கு இருக்கிறது. அது யாருக்காகவும் இல்லை. யாராவது வெல்வார்கள் என்றே அது அங்கு இருக்கிறது. இன்னொருத்தருக்காக செய்யுங்கள் என்ற விஷயம் என் கருத்துக்கு எதிரானது. அதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.
Cricket
90 ஆண்டுகளில் முதல்முறை.. இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.. என்ன தெரியுமா?
![IND Womens Team High Score Test Cricket - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/IND-Womens-Team-High-Score-Test-Cricket.png)
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிக்கா அணிகள் மோதும் ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்து அசத்தியது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 525 ரன்களை குவித்தது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதன்படி இந்த போட்டியின் 109-வது ஓவரை தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஆனெரி டெர்க்சென் வீசினார். இதை எதிர்கொண்டு ரிச்சா கோஷ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 579 ஆக மாறியது. இது மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக மாறியது.
முன்னதாக ஆஸ்கிரேலியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்களை அடித்ததே மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனைக்கு துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடியின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய காரணியாக அமைந்தது.
இந்த ஜோடி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 292 ரன்களை அடித்து அசத்தியது. இது மகளிர் கிரிக்கெட்டில் துவக்க வீராங்கனைகளின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆக மாறியது. இவர்கள் மட்டுமின்றி இந்தியா சார்பில் ஜெர்மியா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்கள் முறையே 55, 69 மற்றும் 86 ரன்களை குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 603 ரன்களை எட்டியது. இந்த போட்டியின் 115.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களை எடுத்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
Cricket
இந்திய வீரர்கள் உலக கோப்பையை வெல்ல இதை செய்ய வேண்டும்… சவுரவ் கங்குலியின் சூப்பர் அட்வைஸ்
![ganguly - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/ganguly.jpg)
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்திக்க இருக்கிறது. இதில் இந்தியா கோப்பையை வெல்ல செய்ய வேண்டியது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.
சவுரவ் கங்குலி கூறும்போது, நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தபோது கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவுக்கு கொடுக்கும் போது அவர் உடனே ஒப்புக்கொள்ளவில்லை. ரொம்பவே யோசித்தார். அவரை ஒப்புக்கொள்ள வைக்க நிறைய நேரம் எடுத்தது.
தற்போது அவர் தலைமையில் இந்திய அணி 6 மாதங்களில் அடுத்தடுத்த உலக கோப்பை இறுதிபோட்டிக்கு வந்து இருக்கிறது. அதே நேரத்தில் ரோஹித் சர்மா ஐபிஎல்லில் 5 கப்பை வென்று கொடுத்துள்ளார். இதுபோன்று கோப்பையை வெல்வது கடினம். சர்வதேச போட்டிகளை விட ஐபிஎல் கடினம் எனக் கூறவில்லை.
ஐபிஎல்லில் 17 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால் இந்த மாதிரியான உலககோப்பை தொடர்களில் 6-7 போட்டிகளில் வென்றால் போதும். தொடர்ந்து இறுதிபோட்டியில் தோற்று கோப்பையை தவறவிடுவதை ரோஹித் சர்மா விரும்பமாட்டார். இதனால் இந்திய அணி பதற்றமில்லாமல் விளையாடினாலே போதும் கோப்பையை வெல்லும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
Cricket
விடுப்பா பாத்துக்கலாம்.. கோலியை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட்
![Kohli and Dravid - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Kohli-and-Dravid.png)
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி இதுவரை தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. எனினும், விராட் கோலி வெறும் 75 ரன்களையே அடித்துள்ளார். நேற்றைய அரையிறுதி போட்டியில் விராட் கோலி 9 ரன்களை எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அரையிறுதி போட்டியில் சிற்பபான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய விராட் கோலி வருத்தத்துடன் டக் அவுட் நோக்கி நடையை கட்டினார்.
டக் அவுட்டில் முகம் முழுக்க சோகம் நிரம்பிய கோலியை பார்க்க நேரிட்டது. அப்போது அவரை நோக்கி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை தட்டிக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
வீடியோவில் கமென்ட் செய்வோர், விராட் கோலிக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் விராட் கோலி மூன்றாவது வீரராக களமிறங்குவது தான் சரியான ஒன்று என தெரிவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்-ஐ வென்றார். எனினும், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்க முடியாமல் அவுட் ஆகினார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 37 ரன்களை அடித்ததே அவரின் சிறப்பான ரன்களாக இருக்கிறது.
-
india1 day ago
88 வருடங்களுக்கு பின்னர் டெல்லியை உருகுலைக்கும் பேய் மழை… கலக்கத்தில் மக்கள்
-
india1 day ago
பறக்கும் விமானத்தில் ஜாலியாக சிகரெட் பிடித்த நபர்!.. அதிர்ச்சி செய்தி….
-
latest news2 days ago
நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி..
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை: பும்ராவுக்கு மற்றொரு சாதனை.. பும் பும்-னா சும்மா நினைச்சியா?
-
tech news1 day ago
ஸ்மார்ட்போனிற்கு ரூ. 18,000 தள்ளுபடி அறிவித்த சாம்சங்
-
Cricket10 hours ago
டி20 உலகக் கோப்பை: அவருக்காக ஜெயிக்கனுமா? இது ரொம்ப மோசம் – அஷ்வின்
-
tech news1 day ago
லூமியா ஸ்டைலில் புது போன் உருவாக்கும் HMD
-
Cricket1 day ago
விடுப்பா பாத்துக்கலாம்.. கோலியை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட்