ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் அய்யர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அந்த தொடரில் லங்காஷயர் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் அய்யர், நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தது அவரது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
வொர்கர்ஸ்டர்ஷயர் மற்றும் லங்காஷயர் அணிகள் மோதிய போட்டியில் வொர்கஸ்டர்ஷயர் அணி 12 பந்துகளில் 16 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது 49 ஆவது ஓவரை வீசிய வெங்கடேஷ் அய்யர் முதல் இரண்டு பந்துகளில் லெக் பை பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகள் வைடு ஆக அந்த அணி பத்து ரன்களை எடுத்துவிட்டது.
முதலில் அதிக ரன்கள் கிடைத்துவிட்ட போதிலும், நம்பிக்கையை இழக்காத வெங்கடேஷ் அடுத்தடுத்து வீசிய பந்துகளில் விக்கெட்டுகளை எடுத்தார். ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வெங்கடேஷ் அய்யர் வீழ்த்திய நிலையில், லங்காஷயர் அணி போட்டியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
முன்னதாக லங்காஷயர் பேட்டிங் செய்த போது, வெங்கடேஷ் அய்யர் 42 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். இந்த அணி முதில் பேட் செய்து 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணிக்கு கேப்டன் ஜோஷ் பொஹனான் அதிகபட்சமாக 123 பந்துகளில் 87 ரன்களையும், ஜார்ஜ் பால்டர்சன் 44 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
பந்துவீச்சின் போது வெங்கடேஷ் அய்யர் ஆறு ஓவர்களை வீசிய நிலையில், 38 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவர் தவிர லங்காஷயர் அணிக்கு ஜோஷூவா போடன் நான்கு ஓவர்களை வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…