இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகமுக்கிய தொடராக துலீப் கோப்பை உள்ளது. துலீப் கோப்பையில் சிறந்து விளையாடும் வீரர்கள் எளிதில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
துலீப் கோப்பை தொடரில் இந்த முறை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிச்சயம் விளையாடுவார்கள் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனிநும், கடைசி நேரத்தில் இருவரும் நேரடியாக வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குவர் என்ற நிலைப்பாட்டை பிசிசிஐ எடுத்தது. முக்கிய வீரர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அழுத்தம் கொடுப்பது சரியில்லை என்று தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தெரிவித்தார்.
இந்த நிலையில், துலீப் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடி இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப இன்னும் சிறப்பாக தயாராக முடியும் என்று அவர் தெரிவித்தார்.
“ஆம், அவர்கள் விளையாடி இருக்க வேண்டும், ஐபிஎல் முடிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மிகமுக்கிய டெஸ்ட் தொடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதால், ஒருவர் நான்கு நாட்கள் நடைபெறும் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இவ்வாறு செய்வதால் போட்டியின் நான்காவது நாள் விக்கெட் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.”
“நான்கு-ஐந்து நாட்கள் அணியுடன் இருப்பது, பிறகு பயிற்சியை துவங்கினால் அவர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு ஏற்ப இருவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று நான் நினைக்கிறேன். சமயங்களில் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதும் முக்கியம்தான்.”
“அக்டோபரில் விக்கெட் உறுதியாக இருக்கும் காலக்கட்டத்தில் அவர்கள் கான்பூரில் விளையாடும் போது டியூ காரணமாக சுழல் அந்த அளவுக்கு இருக்காது. அந்த மைதானம் கங்கை ஆற்றுக்கு அருகாமையிலேயே உள்ளது. இதனால், காலையில் சற்று குளிராகவே இருக்கும். வானிலை படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கும்.”
“வங்கதேசம் அதனை எதிர்கொள்ள வேண்டும். இந்திய அணி பலம் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வங்கதேசம் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. சமீபத்தில் வங்கதேசம் அணி பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறது. நல்ல வேளையாக நல்ல கிரிக்கெட் பார்க்கும் சூழல் உருவாகலாம்,” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…