Categories: Cricket

தோற்றும் இலங்கை வீரரை நெகிழ செய்த கோலி

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு விராட் கோலி செய்த காரியம் இலங்கை வீரரை நெகிழ செய்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ஜெர்சியில் கையொப்பமிட்டு, இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்-க்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நேற்றைய போட்டிக்கு பிறகு, விராட் கோலி இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்-க்கு பரிசளித்தார். இந்த போட்டியில் இலங்கை அணி 110 ரன்களில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் 82 பந்துகளில் 59 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளில் குசல் மெண்டிஸ் மொத்தமாக 103 ரன்களை அடித்திருந்தார். இதே தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மூன்று போட்டிகளிலும் சேர்த்து 58 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பேட்டர்கள் சோபிக்காததால், இந்திய அணியை தொடரில் தோல்வியை தழுவியது. கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் துனித் வெல்லலகே ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இவர் தவிர ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் மஹேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னான்டோ 1 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டும் ரன்களை அடிக்க போராடினர்.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

5 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

12 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

34 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago