சமூக வலைதளங்களில் தற்போதைய டிரெண்ட் திஸ் ஆர் தட் (This or That) எனும் சேலஞ்ச். இதில் நட்சத்திரங்களிடம் இரண்டு பிரபலமான பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய கேள்வி எழுப்பப்படுகிறது. இதேபோன்ற சேலஞ்சில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் சமீபத்திய டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரின் போது பங்கேற்றார்.
கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கின் போது அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய விரேந்திர சேவாக், நேர்காணல்களிலும் இதே போக்கை பின்பற்றி, தடாலடி பதில்களை அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். திஸ் ஆர் தட் சேலஞ்சில் அவரிடம் இந்திய அணியின் மூன்று உச்ச நட்சத்திரங்கள்- விராட் கோலி, எம்எஸ் டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய கேட்கப்பட்டது.
அப்போது அவர் அளித்த பதில் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மூன்று வீரர்களும் தவிர்க்க முடியாத அளவுக்கு சாதனைகளை படைத்துள்ள நிலையில், சேவாக் அளித்த பதிலால் அவரவர் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
முதலில் எம்எஸ் டோனி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையில் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு விரேந்திர சேவாக் எம்எஸ் டோனியை தேர்வு செய்தார். அதன்பிறகு எம்எஸ் டோனி மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இடையே சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு விரேந்திர சேவாக் ஏபி டி வில்லியர்ஸ்-ஐ தேர்வு செய்தார்.
இதேபோன்று டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி என இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சேவாக் கோலியை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து கோலி மற்றும் ரோகித் சர்மா இடையில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில் சேவாக் சற்றும் யோசிக்காமல் ரோகித் சர்மா பெயரை தேர்வு செய்தார்.
விரேந்திர சேவாக் தற்போது அளித்துள்ள பதில்களில் எம்எஸ் டோனி மற்றும் விராட் கோலி ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…