வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் இழப்பிற்கு மொத்தமாக 181 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற பிறகு கேப்டன் ஷாய் கோப் மகிழ்ச்சியுடன் பேசி உள்ளார். இது குறித்து பேசி அவர் என்னுடைய அரைசதம் எங்களுடைய அணிக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக நினைக்கிறோம் .
எங்களுடைய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளி காட்டினார்கள். வரும் போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக பயிற்சி செய்து வருகிறோம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நான் நம்புகிறேன். இந்த போட்டியில் வென்றது போல இந்த தொடரையும் நாங்கள் கைப்பற்றுவோம் என நான் நம்புகிறேன்.
இந்தப் போட்டியில் நாங்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினோமோ அதே அளவிற்கு இறுதி போட்டியிலும் நாங்கள் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். முதல் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்த பிறகு இரண்டாவது போட்டியில் கவனமாக விளையாடி வெற்றியை பதிவு செய்திருக்கிறோம் தொடரை கண்டிப்பாக வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என ஷாய் கோப் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…