இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நடுவரை அசிங்கமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, போட்டி சமநிலையில் முடிந்த காரணத்தால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், வங்கதேச அணி கேப்டனிடம் ஹர்மன்ப்ரீத் நடுவரையும் அழைக்குமாறு கூறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வங்கதேசத்து கிரிக்கெட் கேப்டன் தற்போது குற்றம் சாட்டி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் . இது குறித்து பேசிய வங்கதேசத்து கிரிக்கெட் கேப்டன் நிகர் சுல்தானா ” இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்படி செய்வது நியாயமே இல்லை. அவர் செய்த அந்த செயல் மிகவும் மோசமான செயல். அவர் எங்கள் குழுவுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் பொழுது நடுவரை தவறான வார்த்தைகளில் திட்டினார்.
இந்த நிலையில், இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் அவ்வாறு நடந்து கொண்டது மிகவும் மோசமான செயல். அவர் அப்படி நடந்துகொண்டது மிகவும் தவறு. கிரிக்கெட்டில் விளையாடும்போது நாம் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் இருக்க வேண்டும்.
இப்படி நடந்தால் நம்மளை பார்த்து வரும் இளம் தலைமுறையினர்களுக்கு எண்ணம் அதே போன்று போகும். எனவே, இதை எல்லாம் கருத்தில் கொண்டு இது போன்ற விஷயங்களில் செயல்படவே கூடாது. இதற்கு முன்பு கூட நான் இதைப் போல சண்டைகளை பார்த்திருக்கிறேன். ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் முதல் முறை பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை என்னிடம் கேட்டீர்கள் என்றால் இந்திய அணி கேப்டன் செய்தது தவறுதான் என நான் கூறுவேன் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…