இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது. வங்காளதேசம் அணிக்கு துவக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் மற்றும் முர்சிதா கதுன் முறையே 33 மற்றும் 80 ரன்களை விளாசினர்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 37 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். ருமானா அகமது 6 ரன்களை எடுத்தார். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ரன்களை குவித்தது. மலேசியா சார்பில் மஹிரா இசாதி இஸ்மாயில் மற்றும் எல்சா ஹண்டர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய மலேசிய அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீராங்கனை ஹமிசா ஹஷிம் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். இவருடன் களமிறங்கிய வான் ஜூலியா 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த எல்சா ஹண்டர் 20 ரன்களை எடுத்து அவுட் ஆக, இவருடன் ஆடிய மஹிரா இசாதி இஸ்மாயில் 15 ரன்களில் அவுட் ஆனார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் மலேசியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் வங்காளதேசம் அணி 114 ரன்களில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் நஹிரா அக்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் தவிர ஜனரா அலாம், சபிகும் நஹர் ஜெஸ்மின், ரபியா கான், ரிது மோனி மற்றும் ஷொர்னா அக்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வங்காளதேசம் அணி மகளிர் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் வங்காளதேசம் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…