Categories: Cricket

மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் மற்றும் முர்சிதா கதுன் முறையே 6 மற்றும் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த இஷ்மா தஜிமும் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையிலும், வங்காளதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா மட்டும் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிதானமாக விளையாடிய சுல்தானா 51 பந்துகளில் 32 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்தவர்களில் சொர்னா அக்தர் மட்டும் 19 ரன்களை எடுத்தார்.

கடைசியில் களமிறங்கிய நஹிதா அக்தர் மற்றும் மருஃபா அக்தர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். பூஜா வஸ்த்ராக்கர் மற்றும் தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 26 மற்றும் 55 ரன்களை எடுத்த நிலையில், 11 ஆவது ஓவரில் இந்திய அணி 83 ரன்களை குவித்து பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Web Desk

Recent Posts

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

6 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

27 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

1 day ago