இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 78 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஷஃபாளி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முறையே 37 மற்றும் 13 ரன்களை அடித்தனர். அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அதிரடியாக ஆடினார்.
47 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் கௌர் ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்சரை விளாசி 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். போட்டி முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் கவிஷா எகோடேஜ் இரண்டு விக்கெட்டுகளையும், சமைரா தர்னிதர்கா மற்றும் ஹீனா ஹாட்சாந்தனி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு கேப்டன் இஷா ஓசா நல்ல துவக்கம் கொடுத்தார். இவர் 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய தீர்த்தா சதிஷ், ரினிதா ரஜித் மற்றும் சமைரா தர்னிதர்கா முறையே 4, 7 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கவிஷா எகோடேஜ் சிறப்பாக ஆடினார். இவர் 32 பந்துகளில் 40 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பெற்ற இரண்டாவது வெற்றி இது ஆகும்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…