மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வங்காளதேசத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்காக அணிகள் ஒருபக்கமும், தொடரை நடத்த கிரிக்கெட் வாரியங்கள் ஒருபக்கமும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், யாரும் எதிர்பாரா வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் நடைபெற்று வந்த மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, வங்காளதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அந்நாட்டில் இருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்தும் அந்நாட்டில் அமைதி திரும்பவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல், தீ வைப்பு என பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில், கலவரம் காரணமாக வங்காளதேசத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தலாமா என்பதை ஐசிசி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வங்காளதேசத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள், அந்நாட்டு கள சூழலை உற்று நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வங்காளதேசம் நடத்தும் வாய்ப்புகள் குறைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வங்காளதேசத்தை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடத்த வேறு இடத்தை தேர்வு செய்யும் போது, இதனை நடத்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்களின் படி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை வங்காளதேசம் தவிர்த்து, இந்தியாவில் நடத்த ஐசிசி பரிந்துரைக்கலாம் என்று தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இன்னும் சில வாரங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…