மேற்கிந்த தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 1 டெஸ்ட் 5 ஒரு நாள் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் டாஸ் வென்று மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த மேற்கிந்த தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மொத்தமாக 150 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்த நிலையில் இந்த போட்டியில் அருமையாக பந்து வீசிய அஸ்வின் அசத்தலான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் மொத்தமாக 5 விக்கெட் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது 700- வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்திய 3-வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் சாதனை படைத்தார்.
மேலும் முன்னதாக நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அஸ்வின் தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், பலரும் உங்களுக்கே இந்த நிலைமையா.? என்பது போல கலாய்த்து தள்ளி வந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், அஸ்வின் இந்த போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தது பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஸ்வின் ” 5 விக்கெட் எடுத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. “உங்களுக்கு ஒரு நல்ல நாள் அமையும் போது. அது உங்களுக்கு நல்ல நாள் என்று தெரியும், அப்படி பட்ட அந்த நாளில் நீங்கள் கடினமாக உழைத்து நாளை சிறப்பாக்க வேண்டும். அந்த நாள் எனக்கு இன்று அமைந்தது ” எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…