ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்களை விளாசி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் களத்தில் மோசமாக நடந்து கொண்டார் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஜெய்ஸ்வால் எளிதில் சதம் அடிக்கும் சூழல் உருவாகி இருந்த போதிலும், சுப்மன் கில் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல், சுயநலமாக செயல்பட்டு அரைசதம் கடந்து போட்டியை முடித்துவிட்டார் என்று அவர்கள் வலைதளங்களில் பதிவிட்டனர்.
சுப்மன் கில் செயல் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜெய்ஸ்வால் முதல்முறை மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெய்ஸ்வால், நாங்கள் இருவரும் போட்டியை விக்கெட் இழப்பின்றி முடித்து, பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினோம், என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்கு அதிரடி துவக்கம் கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்கர்களும் அடங்கும். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரும், கேப்டனுமான சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்களை அடித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…