india
பேப்பர் லீக் அரசு நீட்டை எப்போது ரத்து செய்யும்? – காங்கிரஸ் சாடல்!
![neet - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/neet.jpg)
நீட் தேர்வு முறைகேடுக்குப் பின் தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதேபோல் இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வான யுஜிசி NET-2024 தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த 18-ம் தேதி இரண்டு ஷிஃப்ட்களில் நடத்தியது. இந்தத் தேர்வு முடிந்து இரண்டு நாட்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `நெட் தேர்வு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் கிரைம் துறை முக்கியமான சில குறிப்புகளை ஜூன் 19-ம் தேதி கொடுத்தது. இதன்மூலம் நெட் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்தது.
வெளிப்படைத் தன்மை மற்றும் உண்மைத் தன்மையோடு நடைபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு, 2024 யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது. புதிதாக நெட் தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு தனியாக வெளியாகும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ அமைப்பிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருப்பது தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, `நீங்கள் தேர்வுகள் பற்றி நிறையவே விவாதிக்கிறீர்கள். எப்போதுதான் நீட் தேர்வு பற்றி விவாதிப்பீர்கள்? யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் வெற்றி. நமது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை நசுக்க நினைத்த மோடி அரசின் ஆணவத்துக்கான தோல்வி இது’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வை எப்போது ரத்து செய்யும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து!.. மத்திய அரசு அதிரடி..
india
ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.
அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.
india
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.
சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.
india
மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!
வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.
भारत की टॉप मोस्ट पैसेंजर ट्रेनों में एक वंदेभारत देखिए. छत से पानी टपक रहा है. दिल्ली-वाराणसी ट्रैक है और ट्रेन नंबर है 22416. pic.twitter.com/OoPiKbkQOr
— Sachin Gupta (@SachinGuptaUP) July 2, 2024
இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
india
மத்திய பிரதேசத்தில் நாளுக்கு 28 பெண்கள், மூன்று சிறுமிகள்.. அதிர்ச்சி தரும் தகவல்…
ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு ஆதரவாக பல நலத்திட்டங்களை வழங்குவதாக பேசுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பெண் சக்தி என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.
ஆனால் இந்த 10 வருடத்தில் பெண் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. பாலியல் வன்புணர்வு தொடங்கி கொலை என பெண்கள் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய பிரதேசம் காணாமல் போன பெண்கள் குறித்தும், அதை அரசு எவ்வாறு கையாளுகிறது குறித்தும் கொடுக்கப்பட்டு இருக்கும் தகவல் நாட்டையே உலுக்கி இருக்கிறது. மத்திய பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை1ல் தொடங்கி 19ந் தேதி வரை நடக்கும் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலா பக்சன் மத்திய பிரதேசத்தில் காணாமல் போகும் பெண்கள் குறித்து கேள்வி எழுப்பி பேசி இருந்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, 2021 முதல் 2024 வரை 28,857 பெண்கள், 2944 சிறுமிகள் இதுவரை காணவில்லை.
அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 28 பெண்களும், 3 சிறுமிகளும் காணாமல் போகின்றனர். ஆனால் இதுவரை அம்மாநிலத்தில் பெண்கள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக இதுவரை 724 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பல மாவட்டங்களில் நூறுக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போன நிலையில் 10க்கும் குறைந்த வழக்குகளே பதியப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
india
வெள்ளத்தில் மிதக்கும் அசாம்!. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!…
தொடர்மழை காரணமாக அசாமில் வசிக்கும் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகம் என எல்லோரும் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோலகட் என்கிற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை மாநில முதல்வார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பார்வையிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்.
ஒருபக்கம், குஜராத் மாநிலத்திலும் மழை பெய்து வருவதால் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள 30 கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 36.1 செண்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. பல இடங்களில் மழை வெள்ளத்தால் சாலைகள் மூழ்கிக் கிடக்கிறது.
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket14 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
Cricket2 days ago
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
-
tech news1 day ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
latest news21 hours ago
வார இறுதி நாட்கள்… தமிழக முழுவதும் 5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து… வெளியான அறிவிப்பு…!