Categories: job news

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 25 பணியிடங்கள்..! நேர்காணல் முறையில் வேலை..உடனே முந்துங்க..!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI-Airports Authority of India), ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு தபால் மூலம் விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடம்: 

சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Security Screener) பணிக்கு காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனதிலிருந்து, 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லுபடியாகும் BCAS அடிப்படை AVSEC சான்றிதழ் மற்றும் குறைந்தபட்சம் 30.09.2023 வரை செல்லுபடியாகும் BCAS ஸ்க்ரீனர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • ஆங்கிலம், ஹிந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியைப் படிக்கும்/பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

AAI Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்து, தகுதி, அடையாள சான்று, முகவரி விவரங்கள், அடிப்படை விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.
  • OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இந்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பிற்கான தகுதிவாய்ந்த ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை நிரப்பிய பின், விண்ணப்பதாரர் கீழே உள்ள தேதி, நேரம் மற்றும் இடத்தில் நேர்காணலுக்கு வர வேண்டும்.
  • நேர்காணலுக்கு வரும்பொழுது பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
  • நேர்காணல் இடம் – Security Screener (Raipur Airport): Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur–492015.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர் நிரப்பிய விண்ணப்பங்களுடன் ஜூன் 12ம் தேதி நேர்காணலுக்கு வர வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ https://www.aai.aero/en/careers/recruitment இணையதளம் மற்றும் Notification  அறிவிப்பை அணுகலாம்.

AAI Recruitment 2023

Web Desk

Recent Posts

மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 'டிரின்பாகோ…

14 mins ago

டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை…

53 mins ago

மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம்…

2 hours ago

ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.…

3 hours ago

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

22 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

22 hours ago