Connect with us

job news

காவல்துறையில் சேர விருப்பமா..? ரெடியா இருங்க..! உங்களுக்காக வருகிறது அறிய வாய்ப்பு..!

Published

on

TNUSRB SI Recruitment 2023

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாக பணியிடங்களை தேர்வு முறை மூலமாக நிரப்பி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது, காவல் துணை ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்கு காலியாகவுள்ள 621 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

காவல்துறையில் சேருவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுரைகள்/விதிமுறைகள் மற்றும் விளக்கக் குறிப்புகளை TNUSRB -க்குள் சென்று முழுவதுமாக படித்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்: 

காவல் துணை ஆய்வாளர் (தாலுகா) வேலைக்கு 366 பணியிடங்கள், காவல் துணை ஆய்வாளர் (ஏஆர்) வேலைக்கு 145 பணியிடங்கள், காவல் துணை ஆய்வாளர் (டிஎஸ்பி) வேலைக்கு 110 பணியிடங்கள் என மொத்தமாக 621 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNUSRB SI Recruitment

விண்ணப்பதாரரின் வயது:

காவல் துணை ஆய்வாளர் வேலைக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர் 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும், பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி/டிஎன்சி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் திருநங்கைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்கள்/மத்திய ஆயுதக் காவல் படையின் முன்னாள் பணியாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 47 ஆகவும் உள்ளது.

TNUSRB SI Recruitment

விண்ணப்பதாரரின் தகுதி:

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்து பல்கலைக்கழக மானியக் குழு/அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட முறையைப் பின்பற்றாமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

காவல் துணை ஆய்வாளர் வேலையில் சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TNUSRB என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

ஹால் டிக்கெட் & தேர்வு முறை:

காவல் துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முறை 4 கட்டமாக நடைபெறும். அதில் முதல் கட்டமாக அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்பட்டு 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை நடைபெறும். மூன்றாவதாக விவா (Viva Voce) 10 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

TNUSRB SI Recruitment

இதனை அடுத்து சிறப்பு மதிப்பெண்களாக கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளான என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் விளையாட்டுகளில் அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் TNUSRB இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:

இந்த பணியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான தேதி ஜூன் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை உள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களது திறமைகளை சற்று வளர்த்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கான தேதியானது ஆகஸ்ட் 2023 க்குள் அறிவிக்கப்படும்.

TNUSRB SI Recruitment

சம்பள விவரம்:

காவல் துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு TNUSRB க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

job news

ஸ்டேட் பேங்க்ல வேலை பார்க்க சான்ஸ்?…வெளியாகியுள்ள அறிவிப்பு…

Published

on

SBI

படித்து முடித்த இளைஞர்களாக இருந்தாலும் சரி, படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களாகவே இருந்தாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவதையே அதிகம் விரும்புபவர்களாகவே இருந்து வருகிறார்கள். இது போன்ற வாய்ப்பு பற்றிய அறிவுப்புகள் எப்போது வரும் என காத்திருக்கும் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இது போன்ற வாய்ப்புகள் வரும் போது அதனை எப்படி எதிர் கொள்வது என்பதனை உணர்ந்து அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்களும் அதிகரித்தே வருகின்றனர்.

பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள என்னூறு இடங்களை (800) நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Exam

Exam

இந்த பணிகளில் தேர்வதற்கு குரிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியம் இணைய தள முகவரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான கல்வித் தகுதியும், வயது வரம்பு குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி கல்வி கற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கான ஊதியமாக ரூபாய் நாற்பத்தி எட்டு ஆயிரத்து நானூற்றி என்பது ரூபாய் (ரூ.48,480/-) முதல் தொன்னூற்றி மூனாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்(ரூ.93,960/-) எனவும் சொல்லப்படுகிறது.

இந்த பணிகள் தேர்வுக்கு sbi.co.in/web/careers என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வழங்க கடைசி தேதி குறித்தும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதியே கடைசி எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

google news
Continue Reading

job news

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

Published

on

By

ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி  காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/  என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Cricket

சூர்யாவுக்கு சப்போட்டாக களமிறங்கிய அஜீத்!…இதுக்கு அவர் தகுதியானவர் தானாம்!…

Published

on

இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும், கனவுமாக இருந்து வந்தது உலகக்கோப்பையை வெல்வது. ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது.

இந்த தொடருக்கும் பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்ததால்.

Surya Kumar Yadav

Surya Kumar Yadav

இவரைப் போலவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராத் கோலி, ஆல் ரவுண்டர் ஜடஜாவும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரும், ஆல்-ரவுண்டருமான ஹார்திக பாண்டியா இருபது ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த தேர்வு குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டருமான அஜீத் அகார்க்கர் கேப்டன் பொறுப்பிற்கு சூர்ய குமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர் என்றார். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது என்றார். அதோடு உலகிலேயே சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் அதிக திறன்கள் உள்ளன, ஆனால் அதை கண்டறிவது கடினமானவை என்றார்.

google news
Continue Reading

automobile

வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…

Published

on

Bike

உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.

Bajaj Freedom

Bajaj Freedom

சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.

மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

job news

மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…

Published

on

vijay

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

vijay

மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.

விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.

google news
Continue Reading

Trending