Categories: job news

சட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..! ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!

ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (HPSC) காலியாக உள்ள உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவியை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் HPSC உதவி மாவட்ட வழக்கறிஞர் காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு முன், வேட்பாளர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (HPSC) வழங்கிய உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்: 

உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 112 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதவிக்கான தகுதிகள்:

உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்,

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (தொழில்முறை) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • மெட்ரிக் அல்லது உயர்கல்வி பாடங்களில் ஒன்றாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது:

உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது 42 ஆகவும், குறைந்தபட்ச வயது 21 ஆகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு HPSC -இன் https://hpsc.gov.in/en-us/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

தேர்வு செயல்முறை:

உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் 3 கட்டமாக நடைபெறும். முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு, இரண்டாம் கட்டமாக ஆவண சரிபார்ப்பு மற்றும் மூன்றாம் கட்டமாக மருத்துவத்தேர்வு என நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது.?

  • உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், Online Application என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் நிரப்புவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் Notification அறிவிப்பைப் படிக்கவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் கேட்டகப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பணிக்கு தேவையான தகுதி, அடையாள சான்று, முகவரி விவரங்கள், அடிப்படை விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.
  • இறுதியாக விண்ணப்பதாரர் பதிவுக் கட்டணம் செலுத்திவிட்டு, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம்:
உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் மே 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொது, ஓபிசி (OBC) மற்றும் EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் PwBD பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணங்களை நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

சம்பள விவரம்:

உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.53100 முதல் ரூ.1,67,800 வரை ஊதியமாக வழங்கப்படும்.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago