Categories: job news

ஐடிஐ முடித்தவர்களுக்கு முத்தான வாய்ப்பு..! டாடா மெமோரியல் சென்டர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!

டாட்டா நினைவு மையம் (Tata Memorial Centre) அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் மும்பை பெருநகரின் பரேல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆய்வு மையமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகவும் உள்ளது.

தற்பொழுது, டாட்டா நினைவு மையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

டாட்டா நினைவு மையம் 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பம்ப் ஆபரேட்டர் (Pump Operator) பணியை நிரப்ப உள்ளது. ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் வயது: 

பம்ப் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • பம்ப் செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான பிளம்பிங் வேலைகளில் 3 வருட அனுபவத்துடன் எந்தவொரு துறையிலும் ITI முடித்திருக்க வேண்டும்.
  • இரவுகள், ஞாயிறுகள் மற்றும் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ஷிப்ட் முறைப்படி பணியாற்ற விருப்பம் இருக்க வேண்டும்.
  • தீ தொடர்பான பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு அனுபவம் உள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
  • நேர்காணலுக்கு வரும்பொழுது அனைத்து மதிப்பெண் சான்றிதழ், அனுபவக் கடிதத்தின் அசல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

நேர்காணல் இடம்: 

3rd floor, Khanolakar Shodhika,

TMC-ACTREC, Sec-22, Kharghar,

Navi Mumbai- 410210

சம்பள விவரம் மற்றும் நேர்காணல் தேதி:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.23,400 முதல் ரூ.35,000 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 14ம் தேதி நேர்காணலுக்கு வர வேண்டும். நேர்காணலுக்கான பதிவு 10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். அதன்பின் வரும் நபர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

 

Web Desk

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

4 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

4 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago