Categories: job news

10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…! நேவல் டாக்யார்டு கப்பல் துறையில் வேலை..மிஸ் பண்ணிடாதீங்க..!

நேவல் டாக்யார்டு (Naval Dockyard) என்றும் அழைக்கப்படும் கப்பல்துறை, மும்பையில் உள்ள ஒரு இந்திய கப்பல் கட்டும் தளமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் (கடற்படை) கீழ் உள்ள மும்பையில் உள்ள நேவல் டாக்யார்ட் அப்ரண்டிஸ் பள்ளியில் அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர்வதற்காக, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

நேவல் டாக்யார்டு நிறுவனம், பிட்டர், மேசன், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், ஷீட் மெட்டல் தொழிலாளி, தையல்காரர் என பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்ப உள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:
  • விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் ஐடிஐ தேர்வில் தொடர்புடைய வர்த்தகத்தில் மொத்தம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் NCVT ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொடர்புடைய ITI/ வர்த்தக தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ரிக்கரில் புதியவராகப் பதிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • lITI இல்லாமல் மற்றும் ஃபோர்ஜர் மற்றும் ஹீட் ட்ரீட்டர் வர்த்தகத்திற்கு 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் தகுதி குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

 விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் apprenticedas.recttindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Application ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். தவறான தகவல்களைச் சமர்ப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
  • விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். தேர்வு செயல்முறை முடியும் வரை செயலில் இருக்க வேண்டும்.
  • அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 23 இல் மும்பையில் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின் நேர்காணல் நடைபெறும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.7,000 மற்றும் பயிற்சிக்கு புதியவர்களுக்கு மாதம் ரூ.6,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை ஜூன்  24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

NAVAL DOCKYARD

 

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago