மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை, செயலக பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பாதுகாப்பு காவல் பிரிவில் உள்ள காவலர் பதவிக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் 39,481 காவல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,176 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணிகள்: எல்லை பாதுகாப்பு படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சசாஸ்திர சீமா பால் (SSB), செயலக பாதுகாப்பு படை (SSF), ரைபிள்மேன் அசாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவில் சிப்பாய் (NCB)
காலி பணியிடங்கள்: 39,481
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 23 வரை
சம்பளம்: நிலை – 1 படி, ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும், இதர பிரிவு காவலர் பதவிக்கு நிலை-3 படி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
தேர்வு செய்யும் முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in/
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
இந்த காலி பணியிடங்களுக்கான கணினி தேர்வு 2025 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…