நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக இவர் மீது வழக்குப் பதியப்பட்டது. கைது நடவடிக்கையைத் தவிர்க்கும்பொருட்டு இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்வதில் தீவிரம் காட்டினர். தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், விஜயபாஸ்கர் தலைமறைவானார். தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீஸ் நேற்று கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடுத்தகட்டமாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நிலத்தை போலியாக பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக, அந்த நிலத்தின் ஆவணங்கள் மாயமானதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அந்த ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விசாரணை அறிக்கை கொடுத்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்தே அவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…