Categories: latest newstamilnadu

100 கோடி நிலமோசடி வழக்கு – எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவிய இன்ஸ்பெக்டர் கைது!

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக இவர் மீது வழக்குப் பதியப்பட்டது. கைது நடவடிக்கையைத் தவிர்க்கும்பொருட்டு இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்வதில் தீவிரம் காட்டினர். தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், விஜயபாஸ்கர் தலைமறைவானார். தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீஸ் நேற்று கைது செய்தது.

கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடுத்தகட்டமாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட நிலத்தை போலியாக பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக, அந்த நிலத்தின் ஆவணங்கள் மாயமானதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அந்த ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விசாரணை அறிக்கை கொடுத்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்தே அவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்திருக்கிறது.

AKHILAN

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

36 seconds ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

8 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

29 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago