100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள்.
மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடிந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது அவர்களின் டிக்கெட்களை சோதனை செய்த அதிகாரிகள் அப்படி எந்த புக்கிங்கும் நடைபெறவில்லை.
இந்த டிக்கெட்டுகள் போலியானது என்று தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் போலி விமான டிக்கெட் உடன் விமான நிலையத்திற்கு வந்த 100 பயணிகளையும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள்தங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.
அப்போது நான் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, எனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி முன்பதிவு செய்தேன். இது குறித்து உடனடியாக அவரிடம் விசாரித்து வேறு டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று தெரிவித்திருக்கின்றார். இதையடுத்து பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்களுடன் விமான நிலையத்திற்கு வந்தது, மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…