2023 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தொடரில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏராளமான அறிக்கைகளை வெளியிட்டது.
மேலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து உலக கோப்பை தொடரில் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பலக்கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடர்பான பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
அப்போதில் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அனுமதி வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது. முன்னதாக சாகா அஷ்ரஃப் தலைமையிலான குழு இந்தியாவுக்கு பாதுகாப்பு குழுவை அனுப்பி, போட்டி நடைபெறும் மைதானங்களில் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வு தொடர்பான அறிக்கைகளை பார்த்து, ஆலோசனை செய்த பிறகே பாகிஸ்தான் அரசு தனது அணியை உலக கோப்பை தொடரில் பங்கேற்க அனுமதி அளித்து இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
“விளையாட்டை அரசியலுடன் ஒருங்கிணைக்கக்கூடாது என்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து கவனமாக செயல்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பாகிஸ்தான் அரசு தனது கிரிக்கெட் அணியை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் பங்கேற்க அனுப்புவது என்ற முடிவை எடுத்து இருக்கிறது,” என தெரிவித்துள்ளது.
தற்போதைய அட்டவனையின் படி பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அக்டோபர் 6 ஆம் தேதி விளையாட இருக்கிறது. எனினும், இந்த தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்தது. எனினும், இந்த போட்டி அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் நவம்பர் 12 ஆம் தேதி மோதுகிறது. இந்த தேதியும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மாற்றங்கள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான புதிய அட்டவனையை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…