Categories: indialatest news

228 கிலோ தங்கத்தை காணோம்… கேதார்நாத் கோயிலில் மோசடி… சங்கராச்சாரியார் குற்றச்சாட்டு…!

கேதர்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணவில்லை என்று சங்கராச்சாரியார் குற்றச்சாட்டு இருக்கின்றார். கேதர்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணாமல் போய்விட்டது. இதனை விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றசாட்டி இருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருந்ததாவது “சிவபுராணத்தில் 12 ஜோதிலிங்க தலங்கள் குறித்த விவரங்கள் இருக்கின்றது. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோயில் இருக்கும்போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்ட முடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் இருக்கின்றது.

அரசியல்வாதிகள் நமது வழிபாடு தளங்களில் நுழைய முயற்சி செய்கிறார்கள். கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத்தால் ஆன தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது. 228 கிலோ தங்க தகடு காணாமல் போயுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போட்டு வருகிறார்கள். இன்னொரு மோசடி நடக்காமல் தடுக்க  வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை வலியுறுத்தி இருக்கின்றார் சங்கராச்சாரியார்.

Ramya Sri

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago