சென்னையின் முக்கியமான 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.
ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகளுக்காக 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில்களில் காலை 9.30, 9.56, 10.56, 11.40, நண்பகல் 12.20, 12.40 மற்றும் இரவு 10.40 ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயிலில் 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 11.05 11.30, 11.59 ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் கூடுவாஞ்சேரியில் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்களில் 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40, நண்பகல் 12.05, 12.35, மதியம் 1.00, 1.30 மற்றும் இரவு 11.40 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – கும்மிடிபூண்டி காலை 10 மணி ரயிலும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை காலை 9.30 மணி ரயிலும், திருமால்பூர்- சென்னை கடற்கரை காலை 11.05 ரயிலும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை காலை 11.00, 11.30, நண்பகல் 12 மற்றும் இரவு 11 மணி ரயிலும், கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை முதல் காலை 9.20 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரையும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு https://sr.indianrailways.gov.in/ தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: எனக்கும், விராட் கோலிக்கும் இருக்கும் பிரச்னை… ஓபனாக போட்டுடைத்த கவுதம் கம்பீர்…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…