Categories: indialatest news

நீட் தேர்வில் முதல் மதிப்பெண்… 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் போட்ட புது மனு… எதற்காக தெரியுமா…?

நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள்.

எம்பிபிஎஸ் படிப்பதற்கு நாடு முழுவதும் நீட் என்ற தேர்வு எழுதப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாகவே பேப்பர் லீக் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து பலரும் அதிக அளவு மதிப்பெண்களை பெற்றது தெரியவந்தது. அது மட்டும் இல்லாமல் கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. 1500 க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இதனால் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றசாட்டி போராட்டங்களை நடத்தினர்.

பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இது தொடர்பாக மட்டும் மொத்தம் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது .அதாவது நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அந்த மனுவில் “நீதிமன்றம் நீட் யூஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயம் அற்றதாகவும், கடுமையானதாகவும் மட்டுமல்லாமல் விதிமீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14வது பிரிவு படி மீறப்பட்டதாகும்” என்று குறிப்பிட்டுள்ளது .

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ramya Sri

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago