latest news
திருமணமான 6 மாதத்தில்… தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண்… விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்…!
![pregnant - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/pregnant.jpg)
திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மகன் பிரதீஷ் குமார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தின் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கவியரசி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவியரசி பயோமெடிக்கல் படித்து இருக்கின்றார். தற்போது அவர் ஐந்து மாத கர்ப்பமாகவும் இருக்கின்றார்.
கவியரசிக்கும் , அவரது கணவர் வீட்டில் இருப்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டிருக்கின்றார். கவியரசி நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் வீட்டில் இருந்தவர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு திறக்கப்படாத காரணத்தினால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சேலையில் அவர் தூக்கில் தொங்கி இருந்தார்.
தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அவர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கவியரசியின் தாயார் அருந்ததி காவல்துறையினிடம் எனது மகளிடம் பிரதீஷ்குமார் அவரது தாயார் மற்றும் நாத்தனார் 3 பேரும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து இருக்கின்றார். ஆனால் நாங்கள் வரும்போது அவரது உடல் தரையில் இருந்தது. எனவே அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். கவியரசி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலிஸ் சூப்பரென்ட் உறுதி அளித்த பிறகு அங்கிருந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
-
Finance11 hours ago
தரிகிட தோம் போடும் தங்கத்தின் விலை…இப்படி ஆகிப்போச்சே இன்னைக்கு!..
-
Cricket6 hours ago
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது… இந்திய பயிற்சியாளரான பின் ஆட்டத்தை ஆரம்பித்த கம்பீர்…
-
Cricket1 day ago
எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா? அஸ்வினை சீண்டிய இளம் வீரர்
-
latest news1 day ago
இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸில் முதல் பதக்கம்… யார் இந்த மனு பாக்கர்?…
-
latest news1 day ago
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி? சர்ச்சையில் சிக்கிய வங்கதேச யூடியூபர்…
-
india1 day ago
அமெரிக்க பாஸ்போர்ட்… இந்திய ஆதார் கார்டு… காட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்…
-
tech news1 day ago
பார்க்கவே சூப்பரா இருக்கே.. சியோமி பாண்டா எடிஷன் போன் அறிமுகம் – விலை எவ்வளவு?
-
latest news9 hours ago
மேயர் முன்னிலையில் வினோத எதிர்ப்பை தெரிவித்த கவுண்சிலர்கள்…பாரபட்சம் காட்டியதாக புகார்…