Categories: indialatest news

அடக்கொடுமையே… பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற மனைவி… அதுக்கு அவங்க சொன்ன காரணம் என்ன தெரியுமா..?

கணவன் கருப்பாக இருந்த காரணத்தினால் பெற்ற குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு மனைவி அம்மா வீட்டிற்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்த விஷால் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. விஷால் கருப்பாக இருப்பதால் திருமணமான முதலே மனைவி அவரை கிண்டல் செய்து வந்திருக்கின்றார். மேலும் நிறத்தை காரணமாக காட்டி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனிடையே விஷால் மனைவிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை தனது கணவன் வீட்டிலேயே விட்டுவிட்டு அந்த பெண் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை அழைத்து வருவதற்காக விஷால் அங்கு சென்றபோது தனது நிறத்தை காரணமாக காட்டி கணவருடன் திரும்ப வருவதற்கு மறுத்து இருக்கின்றார். இதையடுத்து விஷால் தனது தாயுடன் சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் தான் கருப்பாக இருப்பதால் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பான வழக்கு வரும் சனிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும், அதில் அவரின் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் காரணமாக கூறி கணவனை மனைவி பிரிந்து சென்றுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago