கணவன் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிய காரணத்தினால் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மதுரை அப்பன்திருப்பதி அருகே இருக்கும் அரண்மனை வீதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆட்டோ டிரைவர் ஆக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி மாலதி. இவர் கள்ளந்திரியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலைக்கு சென்று வருகின்றார். இவர் வேலைக்கு சொல்வது செந்தில்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் பலமுறை மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவந்துள்ளார்.
ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாலதி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த கோபமடைந்த மாலதி, செந்தில்குமார் மீது கொதிக்க கொதிக்க இருக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
இதில் செந்தில்குமாருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதியில் இருந்த பலரும் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். 40 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் மாலதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…