ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தன்னுடைய இரண்டாவது போட்டியில் சதம் விளாசி இருக்கிறார் அபிஷேக் சர்மா. நூறு அடித்த போட்டியில் அவர் பயன்படுத்திய பேட் அவருடையது இல்லையாம்.
47 பந்துக்கு 100 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா, இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாவே அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் ஐந்து போட்டி கொண்ட தொடரில் 1-1க்கு என்ற சமநிலையில் இருக்கிறது.
23 வயதாகும் அபிஷேக் சர்மா முதல் செஞ்சுரியை சுப்மன் கில் பேட்டில் தான் அடித்து இருக்கிறார். எப்போதெல்லாம் போட்டி அழுத்தமாக இருக்கிறதோ அந்த சமயத்தில் சுப்மன் கில்லிடம் பேட்டினை வாங்கி விளையாட வந்துவிடுவாராம். அபிஷேக் சர்மாவை பயிற்சி செய்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மா 8 சிக்ஸர்களையும், 7 ஃபோர்களையும் அடித்தார். இவரின் ஸ்டைக் ரேட் 212.77 இருந்தது. பின்னர் இடது கை ஸ்பின்னர் வெல்லிங்டன் மசாகட்சா பந்தில் அவுட்டாகினார். அண்டர் 12ல் இருந்து அபிஷேக் மற்றும் சுப்மன் இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய நாட்டுக்காக அபிஷேக் தேர்வான போது சுப்மன் தான் முதலில் கால் செய்தாராம். அபிஷேக் அழுத்தமான போட்டிகளில் சுப்மன் பேட்டை வாங்குவதை அண்டர்12ல் இருந்தே செய்து வருகிறாராம். ஐபிஎல்லில் கூட இதை செய்து இருக்கிறார். தன் தந்தை மற்றும் பயிற்சியாளர் யுவராஜுக்கு தான் பயமில்லாமல் விளையாடியதுக்கு காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆன நிலையில் இரண்டாவது போட்டியில் ஆடிய ஆகவேண்டிய நிலை இருந்தது. இருந்தும் பதற்றப்படாமல் சரியாக கணித்து விளையாடிய அபிஷேக் ஆச்சரியத்தினை நிகழ்த்தி இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…