Categories: latest newstamilnadu

வெறியை தூண்டிய வார்த்தை…அனாதை என்றதால் வந்த ஆத்திரம்…கொலை செய்த கொடூரம்…

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட  சம்பவம் பதற்றை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலத்தை தெரிவித்துள்ளனர்.

தந்தையை இழந்த இளைஞர் சங்கர் ஆனந்த், இவரது நண்பர் சாகுல் ஹமீதும் இணைந்து ரீல்ஸ் எடுத்து வந்து தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். கடலூர் காராமணிக்குப்பத்தில் வசித்து வந்த சங்கர் ஆனந்தின் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் சில நாட்களுக்கு முன்னர். இதனை அடுத்து தாயின் சாவிற்கு பழி வாங்கும் விதமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொன்றிருக்கிறார் சங்கர் ஆனந்த்.

murder

தனது தாய் லட்சுமிக்கும் ஐடியில் பணிபுரிந்து வந்த சுதன் குமாருக்கும் திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்திருக்கிறது. சங்கர் ஆனந்தின் அண்ணன் ஹரி தாய் லட்சுமியை, சுதனுடனான உறவு குறித்து கண்டித்திருக்கிறார். இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் சுதனின் தாய் கமலேஷ்வரி சங்கர் ஆனந்தை அனாதை பயலே என திட்டியிருக்கிறார். ஏற்கனவே தனது தாயாரின் சாவுக்கு சுதன் தான் காரணம் என கடும் கோபத்திலிருந்த சங்கர் ஆனந்த், சுதன்குமார் அவரது தாய் கமலேஷ்வரி, சுதன்குமாரின் பத்து வயது மகன் நிஷாந்த் மூவரையும் கொடுரமாக கொலை செய்து அவர்களது உடலை எரித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து சங்கர் ஆனந்திடம்  விசாரணை நடத்திய காவல் துறையினரிடம்,   தனது நண்பர் சாகுல் ஹமீதுடன் இணைந்து தான் மூவரையும் கொன்றதாக வாக்கு மூலம் அளித்திருக்கிறார் சங்கர் ஆனந்த்.

sankar sundar

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago