அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக கட்சி என்பது கடல் போன்றது, அதில் அயிரக்கணக்கானோர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் முப்பது ஆண்டுகள் ஆட்சி நடத்திய, பொன் விழா கண்ட கட்சி என சொன்னார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ‘செஞ்சி’ ராமச்சந்திரன் நடிகர் விஜய் புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இணையப்போவதாக செய்தி வெளியானதாக பேட்டியின் போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது இது குறித்து தனக்கு இதுவரை எந்த விதமான தகவலும் வரவில்லை என்றார், இது உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் அது கிளப்பிவிடப்பட்ட புரளி என்றும் பதிலளித்தார்.
அதோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வலுவான கட்சி என்றும், தமிழகத்தில் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. தனது கட்சி பொன் விழா கண்ட கட்சி என்றும் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கடல் போன்றது. ‘செஞ்சி’ ராமச்சந்திரன் போல ஆயிரக்கணகானோர் அங்கம் வகித்தும், உழைத்தும் வருகின்றனர் என பதிலளித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் வசதி குறைபாடுகள் இருப்பதாக அன்மையில் பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பழனிசாமி, மாணவர்களின் குறைபாடுகளையே தான் எடுத்துக் கூறியதாகவும், இது குறித்து அரசு முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவர்களின் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொன்னார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…