Connect with us

latest news

இங்க ‘இம்னு’ சொன்னா சிறைவாசம், ‘உம்னு’ சொன்னா வனவாசம்… சாட்டை முருகன் கைது… ஈபிஎஸ் கடும் கண்டனம்…!

Published

on

சாட்டை துரைமுருகன் கைதானது குறித்து இபிஎஸ் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தல பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “கடந்த 3 ஆண்டு விடியல் திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் கொடுமையாளர்கள் என பலரும் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகின்றது.

தன் கையில் இருக்கும் அதிகாரம் நிரந்தரமானது என்ற இருமாப்புடன் ‘இம்’ என்றால் சிறைவாசம் ‘உம்’ என்றால் வனவாசம் என்ற ரீதியில் வழக்கு போட்டு கைது செய்யும் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை முருகன் அவர்களை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பொய் வழக்கு போட்டு இந்த அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். காவல்துறையினரை கையில் வைத்திருக்கும் விடியா தி.மு.க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். இந்த ட்விட்டர் பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending