Categories: latest newstamilnadu

இங்க ‘இம்னு’ சொன்னா சிறைவாசம், ‘உம்னு’ சொன்னா வனவாசம்… சாட்டை முருகன் கைது… ஈபிஎஸ் கடும் கண்டனம்…!

சாட்டை துரைமுருகன் கைதானது குறித்து இபிஎஸ் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தல பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “கடந்த 3 ஆண்டு விடியல் திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் கொடுமையாளர்கள் என பலரும் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகின்றது.

தன் கையில் இருக்கும் அதிகாரம் நிரந்தரமானது என்ற இருமாப்புடன் ‘இம்’ என்றால் சிறைவாசம் ‘உம்’ என்றால் வனவாசம் என்ற ரீதியில் வழக்கு போட்டு கைது செய்யும் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை முருகன் அவர்களை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பொய் வழக்கு போட்டு இந்த அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். காவல்துறையினரை கையில் வைத்திருக்கும் விடியா தி.மு.க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். இந்த ட்விட்டர் பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Sri

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago