அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டோனால்ட் டிரம்பை விட ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஷுக்கு இளைஞர்களிடம் வரவேற்பு கூடி இருக்கிறது. இதை தொடர்ந்து கமலா ஹாரிஷ் கடந்த 24 மணிநேரத்தில் செய்த சாதனை குறித்த ஆச்சரிய தகவல்களும் வெளியாகி உள்ளது.
குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து முதலில் போட்டியிட்டு இருந்தவர் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தான். ஆனால் பைடன் தொடக்கத்தில் இருந்தே தொய்வை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. முதல் நேரடி விவாதத்தில் ட்ரம்பை எதிர்க்க முடியாமல் தோல்வியை தழுவினார்.
இது பலரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜோ பைடன் உடனடியாக போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் கிளம்பியதை எடுத்து சமீபத்தில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருக்கிறார்.
அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்பட இருக்கும் பட்சத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 678 கோடி ரூபாய் நிதி குவிந்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்காக குவிந்த அதிகபட்ச நிதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரிசை எளிதாக வென்று விடுவேன் என டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து அவருக்கு தற்போது வெற்றி வாய்ப்பு அமோகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…