Categories: indialatest news

ஒரு ராத்திரிக்கு 1 லட்சம்… அம்பானி வீட்டுக்கு கல்யாணம்… கிடுகிடுவென உயர்ந்த ஓட்டல் கட்டணம்…!

அம்பானி வீட்டில் திருமணம் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் மிகப் பெரிய அளவில் உயர்ந்து இருக்கின்றது.

இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவரின் இளைய மகனான ஆனந்த அம்பானிக்கும் அவரின் காதலியான வைர வியாபாரி மகள் ராதிகா மெர்சண்டுக்கும் வருகிற ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள jio old convention சென்டரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.

இந்த வளாகத்தில் மூன்று நாட்கள் திருமணம் நடைபெற உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே திருமண நிகழ்ச்சிகள் சம்பிரதாயங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மும்பையில் நடைபெற்று வருவதால் இதன் தாக்கம் அப்பகுதியில் அதிகரித்து இருக்கின்றது.

அதாவது மும்பையின் முக்கிய ரிலையன்ஸ் எஸ்டேட் மயமான பந்த்ரா பொருளாதாரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் மும்பை ஹோட்டல்கள் தங்களது கட்டணங்களை அதிக அளவில் உயர்த்தி இருக்கிறார்கள். ஜூலை 14 அன்று ஒரு ஓட்டல் ஒரு இரவுக்கு ₹91,350 க்கு வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது .

வழக்கமாக 13000 ரூபாய்க்கு இருந்த கட்டணமானது ஆனந்த அம்பானியின் திருமணத்திற்காக அதிக அளவு உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விருந்தினர்களுக்கான சரியான தங்குமிடங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத காரணத்தினால், ஹோட்டல்கள் கட்டணம் உயர்ந்து இருக்கின்றது. இருப்பினும் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் முன்பதிவு செய்து வருகிறார்கள். ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை அறைகள் எதுவும் அந்த ஹோட்டல்களில் இல்லை அனைத்தும் முன்பதிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

Ramya Sri

Recent Posts

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

33 mins ago

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…

1 hour ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

2 hours ago

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

10 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

10 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

13 hours ago