Categories: indialatest news

அம்பானி வீட்டுத் திருமணம்… ஐடி ஊழியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்… குஷியில் ஊழியர்கள்…!

ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு இன்று டெல்லியில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று வருகின்றது. கடந்த நான்கு மாதங்களாக திருமண கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருந்தார்கள்.

ஹெல்தி, சங்கீத், நிச்சயதார்த்தம் என பல கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று 29 வயதான ஆனந்த் அம்பானிக்கும் வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சண்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்று வருகின்றது. இந்த திருமணத்திற்காக மட்டும் முகேஷ் அம்பானி 4000 முதல் 5000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

அது மட்டும் இல்லாமல் இந்த திருமண நிகழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் நிறுவன முதலாளிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். அது மட்டும் இல்லாமல் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமரும் இதில் கலந்து கொண்டிருக்கின்றார்.

இந்த திருமணத்திற்கு பலர் பங்கேற்க வருவதால் மும்பையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும் ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வழங்கப்பட்டிருக்கின்றது. நகரின் மிகப்பெரிய ஐடி பூங்காக்களின் ஒன்றான பாண்ட்ரா குர்ளாலா வளாகத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் வருகிற 15ஆம் தேதி வரை வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது

Ramya Sri

Recent Posts

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

1 hour ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

1 hour ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

2 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

3 hours ago

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…

4 hours ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

4 hours ago