தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த போது அன்புமணி இதனை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்திற்கு பிறகு விழுப்புரத்தில் விஷசாராயம் அருந்தி பதினோரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் கொலை என அடுத்தடுத்து நடந்து வரும் கொலை சம்பவங்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் நிலையை தெளிவாக காட்டி வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொலை நடந்து வருவதாக சொல்லியிருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பேசிய போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். எங்கவுண்டரில் கொல்லப்பட்ட திருவேங்கடத்தை கை விலங்கு அணிவிக்காமல் கூட்டிச்சென்றது ஏன் என்றும், அதிகாலை நேரத்தில் அவசர, அவசரமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் மர்மம் என்ன?, இந்த கொலைக்கு பின்னால் யார் யார் எல்லாம் இருக்கிறார்கல் என்பதை சிபிஐ விசாரணை தெளிவு படுத்தும் என்றார்.
அதே போல மது பானங்களை சிறிய அளவிலான பாக்கெட்களில் விற்பனை செய்ய நினைக்கும் தமிழக அரசு இது மாதிரியான புதிய முயற்சிகளை கல்வியை மேம்படுத்துவதிலும், நீர் மேலான்மையிலும் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மக்களுக்கு தமிழக அரசு துரோகத்தை நிகழ்த்தி வருகிறது எனவும் பேசியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…